தபால் பையில் தமிழ் பொதுமக்கள் வரவேற்பு

மதுரை: தபால் துறையின் பையில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால்  கொள்முதல் செய்யப்பட்டு,  33 அஞ்சல் கோட்டத்திற்கு தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தபால் பை முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு சங்கம் கண்ட மதுரையிலிருந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இந்தி, ஆங்கில எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. தற்போது அழகு தமிழில், தபால் துறை திட்டஙகள் குறித்த குறிப்புகளும் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது. இது பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது.  இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்….

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!