Thursday, June 27, 2024
Home » தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தக்கோரி கணவன் வீட்டின் முன்பு பெட்ரோல் கேனுடன் இளம்பெண் தர்ணா: ஆர்கே பேட்டை அருகே பரபரப்பு

தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தக்கோரி கணவன் வீட்டின் முன்பு பெட்ரோல் கேனுடன் இளம்பெண் தர்ணா: ஆர்கே பேட்டை அருகே பரபரப்பு

by kannappan

பள்ளிப்பட்டு: ஆர்கே பேட்டை அருகே தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த கோரி பெட்ரோல் கேனுடன் இளம்பெண், கணவன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் கோபால். அவரது மகன் தினேஷ் (28). சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். அரக்கோணம் வட்டம் பெருங்களத்தூரை சேர்ந்தவர் செல்வம். ரேஷன் கடை விற்பனையாளர் இவரது மகள் ஆனந்தி (23). எம்எஸ்சி படிக்கிறார். இவருக்கும், தினேஷுக்கும் கடந்த 2020 அக்டோபரில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்தி, பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார் என கூறப்படுகிறது.இதைதொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆனந்தி, கணவனுடன் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து இரு குடும்பத்து பெரியோர்கள், அவர்களை சமரசம் செய்து, குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர் தினேஷ், ஆனந்தியை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதை பார்த்த ஆனந்தி அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், நேற்று காலை ஆனந்தி, அம்மையார்குப்பத்தில் கணவன் வீட்டுக்கு சென்றார். அங்கு தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி பேசியுள்ளார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆனந்தி, கணவன் வீட்டின் முன்பு சாலையில், பெட்ரோல் கேனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார். தகவலறிந்து ஆர்கே பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தர்ணாவில் ஈடுபட்ட ஆனந்தியிடம் சமரசம் பேசி, அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து திருத்தணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். அவரும், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கணவன் வீட்டின் முன்பு மனைவி, பெட்ரோல் கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மையார்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi