அழகர்கோவில்: மதுரை தனியார் பள்ளியில் நடந்த பருவத்தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அழகர்கோவில் சாலை அப்பன் திருப்பதி அருகே தனியார் பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நடந்த 6ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித்தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த ஜாதி தீண்டத்தகாத ஜாதியாக இருந்தது என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….