தனியார் நிறுவன ஊழியரிடம் ₹20.73 லட்சம் ஆன்லைன் மோசடி

தர்மபுரி, நவ.18: தர்மபுரியில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மாற்றக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ₹20.73 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி ஹரிஹரநாத சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹர கணேசன்(38). இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், போலியான கணக்குகள் மூலம், பணம் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நீங்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய ஹரிஹர கணேசன், தனது வங்கி கணக்கில் இருந்த ₹20 லட்சத்து 73,993யை வேறு வங்கி கணக்குக்கு மாற்றினார். இதையடுத்து குறுந்தகவல் வந்த நம்பரை அவர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து தான் ஏமாற்றபட்டதை அறிந்த ஹரிஹர கணேசன், தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா