தனியார் நிதிநிறுவன ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை குடியாத்தத்தில் கடன் தொல்லையால்

குடியாத்தம், செப்.19: குடியாத்தத்தில் கடன் தொல்லையால் தனியார் நிதிநிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ்(24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நித்தோஷ் பெற்றோருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால், அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்துள்ளார். ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும் அசல் பணத்தை திரும்ப செலுத்தமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தோஷ் நேற்று திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் ெதால்லையால் நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சாத்தூரில் மக்காச்சோளம் நடும் பணி தீவிரம்

கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுடன் கைது

ஆலங்குளத்தில் நாளை மின்தடை