தனியார் டிராவல்ஸ் ஊழியர் தற்கொலை

கேடிசி நகர், மார்ச் 9: தாழையூத்து அருகே கட்டுடையார் குடியிருப்பு, நடுத்தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் பிரேம்குமார் (31). தனியார் டிராவல்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்தார். ராமையன்பட்டி சிவாஜிநகரில் உள்ள உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்