நெல்லை, அக். 27: நெல்லை மாவட்டம், மணிமுத்தாறை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் லட்சுமணன் (54). இவர் கடந்த 24ம்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பக்கத்து ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் (25ம்தேதி) வீட்டிற்கு வந்து லட்சுமணன் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். இதில் வீடு மற்றும் பீரோக்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவிலிருந்த ரூ.15 ஆயிரம் மட்டும் திருட்டு போனது தெரிய வந்தது. தகவல் அறிந்து மணிமுத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.