தனிப்பிரிவு காவலர்கள் 27 பேர் இடமாற்றம்

தென்காசி, செப். 27: தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் எஸ்பி அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு காவலர்கள் 27 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி னிவாசன் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் தனிப்பிரிவு காவலர்களின் பணி மிகவும் இன்றியமையாதது ஆகும். பிரச்னைகளின் உண்மை தன்மை, புலனாய்வு, உளவுத்தகவல்கள் ஆகியவற்றை திரட்டும் முக்கிய பணியில் தனிப்பிரிவு காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 27 தனிப்பிரிவு காவலர்களை வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து தென்காசி மாவட்ட எஸ்பி னிவாசன் உத்தரவிட்டுள்ளார்.‌

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது