Saturday, July 6, 2024
Home » தனக்கு தாேன வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது காதலிக்கு இன்று நடக்கும் திருமணத்தை நிறுத்த

தனக்கு தாேன வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது காதலிக்கு இன்று நடக்கும் திருமணத்தை நிறுத்த

by Karthik Yash

குடியாத்தம், ஜூன் 25: குடியாத்தம் அருகே காதலிக்கு ராணுவ வீரருடன் இன்றும் நடக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த தனக்கு தானே வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்மண்குட்டை பகுதியை சேர்ந்தவர் வடிவரசன்(26). இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர்களுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் இளம்பெண் காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த வடிவரசன், இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வைத்து ‘வாழ்த்துக்கள் நண்பா’ என அவரது நண்பர்கள் திருமண வாழ்த்து தெரிவிப்பது போஸ்டர்களை அடித்து குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் ஒட்டினார். அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்த பெண் வீட்டார், பரதராமி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவரசனை நேற்று கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

10 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi