Friday, September 6, 2024
Home » தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை: செய்யாறு அருகே சோகம்

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை: செய்யாறு அருகே சோகம்

by Karthik Yash

செய்யாறு, டிச.27: தந்தை இறந்த சேகாத்தில் 14 வயது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆண்டாள்(34), சிப்காட்டில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள்கள் யுவ(14), நிவ(13). இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள். இந்நிலையில் கணேசன் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாராம். தந்தை இறந்த சோகத்தில் யுவ மன உளைச்சலுடன் காணப்பட்டாராம். மேலும், சரிவர யாரிடமும் போசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆண்டாள் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த யுவ திடீரென சமையலறையில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த வேதனையில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi