தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (53). கூலி தொழிலாளியான இவர் திமுகவை சேர்ந்தவர். 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் முத்துமாரி. கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த முத்துப்பாண்டி, உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். சென்னையில் வசிக்கும் மூத்த மகள் நேற்று காலை கமுதிக்கு வந்தார். இதனால் இறுதிச்சடங்குகள் செய்வது தாமதமானது. நேற்று காலை முத்துமாரிக்கு பிளஸ் 2வில் கடைசி தேர்வான வரலாறு தேர்வு நடந்தது. நேற்று காலை தேர்வு மையத்திற்கு முத்துமாரி சோகத்துடன் வந்தார். இதுபற்றி அறிந்து அங்கு ஆய்வுக்கு வந்த கல்வித்துறை துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, முத்துமாரிக்கு ஆறுதல் தெரிவித்தார். …

Related posts

5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!