பூந்தமல்லி: வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(72). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரை காணவில்லை என இவரது மகள் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் இறந்தவரின் மகன் குணசேகரன்(42), கடந்த மாதம் சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்து அவரின் உடலை காவேரிப்பாக்கத்தில் புதைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை தேடினர். சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி நீதிமன்றத்தில் குணசேகரன் சரணடைந்தார். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மனுவை விசாரித்த பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5 நாட்கள் குணசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. …