தத்தனூரில் பாலியல் வன்முறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஊர்வலம்

ஜெயங்கொண்டம்,டிச.22: ஜெயங்கொண்டம் அருகே தத்தனூரில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஜெயங்கொண்டம் வட்டார இயக்க மேலாண்மை அலகின் சார்பில் தத்தனூர் ஊராட்சியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார், ஏபிஓ மற்றும் வட்டார இயக்க மேலாளர் திருவரசு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு