தண்ணீர் விற்க எதிர்ப்பு தெரிவித்து டிரைவர் மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

அம்பத்தூர்: சென்னை பட்டரைவாக்கம் யாதவா தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (29). மினி வேனில் தண்ணீர் தொட்டி அமைத்து வீடு வீடாக தண்ணீர் விற்பனை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் ஜெகநாதன் நகரில் தண்ணீர் சப்ளை செய்தபோது, அங்கு வந்த 2 பேர், எங்கள் ஏரியாவில் எப்படி நீ தண்ணீர் வியாபாரம் செய்யலாம், என தகராறில் ஈடுபட்டு,  அருகில் இருந்த கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முனியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ராஜமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த தீலீப் (30), பாலமுருகன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது