தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்பு காட்டில், தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், தண்ணீர் தேடி ஆண் புள்ளிமான் ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. சாமிபுரம் கிராமத்தில் சுற்றி வந்த அந்த மானை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. இதனைக் கண்ட கிராம மக்கள், விரைந்து சென்று மானை மீட்டனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், வனச்சரகர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் மற்றும் வேட்டை தடுப்பு குழுவினர் விரைந்து சென்று மானை மீட்டனர். பின்னர், வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் முன்னிலையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, அய்யூர் வனப்பகுதியில் விடப்பட்டது….