தண்டவாளத்தில் விரிசல்

கடலூர்: கடலூர் முதுநகர் மணவெளியில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில்வே ஊழியர் இன்று காலை பணியில் இருந்தார். அப்போது அவர் அங்குள்ள தண்டவாளத்தை பார்த்தபோது, அங்கு விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதை பார்த்த அவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.அந்த நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்வே அதிகாரிகள் அந்த ரயிலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைத்தனர். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரிசில் ஏற்பட்ட இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர். இதன் பிறகு அரை மணி நேரம் தாமதமாக அந்த மார்க்கத்தில் ரயில்கள் சென்றன. இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்….

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!