தட்டார்மடம் அருகே பெண்ணிடம் அத்துமீறிய வியாபாரி கைது

சாத்தான்குளம், அக். 21: வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிக்குமார் (40). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் கூச்சலிடவே வெற்றிக்குமார் அவரை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்து தப்பினார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் எஸ்ஐ குரூஸ் மைக்கேல் வழக்கு பதிந்து வெற்றிக்குமாரை கைது செய்தார். விசாரணைக்கு பிறகு வெற்றிக்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்