தடைபட்ட வளர்ச்சி பணிகளை நிறைவு செய்வேன் : எஸ்.ஆர்.ராஜா உறுதி

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று மாலை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம் பேசுகையில், தாம்பரத்தில் 2 முறை நகரமன்ற உறுப்பினர், 2 முறை எம்எல்ஏவாக இருந்த நான், இத்தொகுதியை சேர்ந்த 35 ஆயிரம் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கியிருக்கிறேன். கடந்த 2009-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் கொண்டு வந்த பாதாள சாக்கடை திட்டத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஆட்சி முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதால், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவில்லை. அவ்வாறு உயர்ந்திருந்தால், இந்நேரம் தாம்பரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றிருக்கும்.எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறவைத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவதற்கு உதவ வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக அரசினால் தடைபட்ட அனைத்து வளர்ச்சி பணிகளும் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன் என திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா உறுதி கூறினார். வாக்கு சேகரிப்பின்போது, அவருடன் திமுக மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…