தடுப்பு கட்டையில் அரசு பேருந்து மோதி விபத்து

 

காலாப்பட்டு, செப். 24: தடுப்பு கட்டையில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை தமிழக அரசு விரைவு பேருந்து கும்பகோணத்துக்கு புறப்பட்டது. அரியலூரை சேர்ந்த ராஜராஜன் பேருந்தை ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கோட்டக்குப்பம் அருகே பிள்ளைசாவடி கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்பு கட்டையில் பலத்த சத்தத்துடன் பேருந்து மோதியது.

தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், பயணிகளை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி தகவலறிந்த கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை