தடகள போட்டிகளில் 506 பேர் பங்கேற்பு

 

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் 37 பள்ளிகளை சேர்ந்த 506 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உலகத் திறனாய்வு திட்டத்தில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தை சேர்ந்த 37 பள்ளிகளில் பங்கேற்றன. தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 279 மாணவியரும், 227 மாணவர்களும் ஆக 506 பேர் பங்கேற்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை