தஞ்சை இறால் பிரியாணி

செய்முறை பாத்திரத்தில் எண்ணை சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவேண்டும். தொக்கு போல் வந்ததும், அதில் இறாலை சேர்த்து வதக்கவும். அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைத்து மசாலா கலவையுடன் சேர்க்க வேண்டும். ஒரு கிளாஸ் அரிசிக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உடன் சிறிது தயிர், புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து குக்கரில் சிம்மில் வைத்து பத்து நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

Related posts

முட்டை இட்லி உப்புமா

கரண்டி ஆம்லேட்

கறி ஊறுகாய்