Sunday, October 6, 2024
Home » தஞ்சை அருகே சேறும் சகதியுமான சாலையில் வாழைக்கன்று நடும் போராட்டம்

தஞ்சை அருகே சேறும் சகதியுமான சாலையில் வாழைக்கன்று நடும் போராட்டம்

by kannappan

தஞ்சை: தஞ்சை அருகே சேறும் சகதியுமான சாலையில் வாழைக்கன்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சி மனப்படுகை பிள்ளையார்கோயில் தெருவில் மந்தவெளி செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் சாலையில் செல்வதற்கு பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க கோரி தொடர்ந்து பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் பெருமழையால் சாலை சேறு, சகதியுடன் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சேறு, சகதியுமான சாலையில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலு, சோமு, கிளை நிர்வாகிகள் அய்யாசாமி, துரைசத்தீயசீலன், கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்….

You may also like

Leave a Comment

3 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi