தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி

 

தஞ்சாவூர், ஆக. 25: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தினமும் அதிகளவில் ரயில்கள் வந்து செல்கின்றன. சென்னை கோவை திருநெல்வேலி நாகர்கோவில் திருச்சி மயிலாடுதுறை வேளாங்கண்ணி நாகப்பட்டினம் மற்றும் வெளி மாநிலமான டெல்லி மும்பை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் விரிசல் மற்றும் இடைவெளிகள் இருப்பதை அறிந்து அவற்றை பேக்கிங் இயந்திரம் மூலம் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் ரயில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் இந்த பணியானது ரயில்வே தண்டவாளம் நெடுவே நடைபெறும் என கூறப்படுகிறது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’