Thursday, June 27, 2024
Home » தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல்

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல்

by Francis

 

தஞ்சாவூர்,மே29: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு கலந்துரையாடல் 31ம் தேதி நடக்கிறது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக அலுவலர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் மைய நூலகத்தில் தினந்தோறும் 460 மாணவ- மாணவிகள் வந்து போட்டி தேர்விற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கு மட்டும் 223 மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்று வருவதுடன், இவர்களுக்கு தேவையான வினா- விடை அடங்கிய தொகுப்புகள் மற்றும் நூல்களும் கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர்.

இதற்காக மாவட்ட மைய நூலகம் சார்பில் கடந்த மூன்று மாதமாக வாரந்தோறும் மாதிரிதேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 31ம் தேதி காலை 10 மணிக்கு குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் குரூப்-4 தேர்விற்கு படிக்கும் மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

18 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi