தஞ்சாவூர் அருகே பஸ், பார்சல் லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

வல்லம்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் அரசுப் பஸ்சும், பார்சல் சர்வீஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், பஸ்சின் டிரைவர், கண்டக்டர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்து. இதேபோல் அதிராம்பட்டினத்தில் இருந்து வல்லம் நோக்கி பார்சல் சர்வீஸ் லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. திருக்கானூர்பட்டி நால்ரோடு சந்திப்பில் அரசு பஸ் மீது, பார்சல் சர்வீஸ் லாரி வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறி விழுந்தன. லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலை பக்கவாட்டில் சுவரில் மோதி நின்றது. இதில், பஸ்சின் முன்பகுதி சேதமானது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் தஞ்சாவூர், சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த வினோதன் (54), பஸ் கண்டக்டர் அம்மாபேட்டை கார்த்திகேயன் (53) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை