தஞ்சாவூர் அருகே டூவீலர் விபத்தில் சோபா தயாரிப்பு தொழிலாளி பலி

 

வல்லம், மார்ச் 14: தஞ்சாவூர் அருகே வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு என்பவரின் மகன் அஜித் (24). சோபா தயாரிக்கும் பணி செய்து வந்தார். இவர் குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு திருவாரூருக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வர பைக்கில் நேற்று முன்தினம் இரவு வல்லத்தில் இருந்து புறப்பட்டார். தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற பைக் மீது அஜித் ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் நிலைத் தடுமாறி சாலையில் விழுந்த அஜித் படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை