தஞ்சாவூர், ஆக. 30: தஞ்சாவூரில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் பழுதான மின் கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே மருத்துவ கல்லூரி சாலை, ஜே.ஜே.நகர், அண்ணாமலை நகர், பொன் நகர், புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல், மருதம், நேதாஜி, காவேரி நகர், நட்சத்திர நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஆக.30) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேலும், தஞ்சாவூர் தொகுப்பு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் பழுதான மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் கிருஷ்ணாபுரம், ராஜராஜன் நகர், ஜெயலட்சுமி நகர், புது நகர், ராஜீவ் நகர், வனதுர்கா நகர், பெரிய கோயில் எதிரில் வருவாய் அலுவலகம், ராஜா மிராசுதார் மருத்துவமனை பகுதிகளில் நாளை (ஆக.31) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.