தங்கவயல்: தங்கவயல் தமிழ் சங்கத்தில் அம்பேத்கர் பிறந்த நாள், கண்ணகி நினைவாக சித்ரா பவுர்ணமி மற்றும் ஜான் டைலருக்கு புகழ் வணக்கம் ஆகிய ஒருங்கிணைந்த விழாவாக கொண்டாடப்படுவதாக சங்க தலைவர் சு.கலையரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “வரும் 14ம் தேதி இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் பிறந்த நாள், கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சித்ரா பவுர்ணமி மற்றும் தங்கவயலை உருவாக்கிய ஜான் டைலருக்கு புகழ் வணக்கம் ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தங்கவயல் தமிழ் சங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவ படத்தை கவுன்சிலர் மஞ்சுளா ரசித்தான் திறந்து வைக்கிறார். சிலம்பு செல்வி கண்ணகியின் உருவ படத்தை அன்பானந்தன் திறந்து வைக்க, ஜான் டைலர் உருவ படத்தை கவுன்சிலர் டி.ஜெயபால் திறந்து வைக்கிறார். அனந்த கிருஷ்ணன் தலைமையில் தீபம் எம். சுப்ரமணியம், கமல் முனிசாமி முன்னிலையில் டாக்டர் அம்பேத்கர் விருது, துரை ராஜேந்திரன், மெய்யழகனுக்கும், சிலப்பதிகார விருது பி.இ.எம்.எல்.நகர் தா.அன்பழகனுக்கும், ஜான் டைலர் விருது தாடி அன்பழகனுக்கும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேராசிரியர் கிருஷ்ணகுமார், டாக்டர் பிரபு ராம், ஆர்.வி.குமார், நா.சு.மணி, நாத்திகம் தர், கலை.அன்பரசன், கருணாகரன், திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்’’ என்று கூறியுள்ளார்….