பாப்பிரெட்டிபட்டி, ஜூலை 7: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதிகளில் நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமடைந்தது. இதனால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், ஒரு கிலோ தக்காளி ₹100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், 28 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி அதிகபட்சமாக ₹500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்த நிலையில், மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.