கருங்கல், ஜூலை 27: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தக்கலை தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் ,கிளைக் கழகத்தின் செயலாளர்கள், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கழகத் தோழர்கள் தவறாமல் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்.