தகாத உறவு காதலியை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.7: கிருஷ்ணகிரி அருகே தகாத உறவு காதலியை சரமாரி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த ஜே.காரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாக்யா (35). இவரது கணவர் முனிராஜ். இவர், இறந்து விட்டார். இந்நிலையில், எச்.செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவருடன் பாக்யாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி மதியம் பாக்யாவின் வீட்டுக்கு சென்ற ரமேஷ், உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், பாக்யா மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பாக்யா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று முன்தினம் ரமேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையிலடைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்