டோக்கியோ ஒலிம்பிக் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற தடை!: பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

டோக்கியோ: ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக போட்டிகளை காண தினந்தோறும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. 
பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: 
* ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட மனநிலையில் மைதானத்திற்கு வர வேண்டாம்.
* போட்டிகளின் போது எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது.
* ரசிகர்கள் வெற்றி உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது.
* ஒருவர் மற்றவரோடு கைகளை தட்டி சியர்ஸ் செய்யக்கூடாது.
* பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும்.
* பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
* பார்வையாளர்களுக்கு இடையே எந்த வித நேரடி தொடர்பும் இருக்கக்கூடாது.
* போட்டியாளர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற தடை.
* ஆல்கஹால் போன்ற பொருட்களை மைதானங்களுக்கு கொண்டு வருவதற்கு தடை.

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி