டைல்ஸ் தொழிலாளி தற்கொலை

பாகூர், ஜூன் 14: கிருமாம்பாக்கம் அடுத்த உச்சிமேடு கேசவன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (39). டைல்ஸ் தொழிலாளி. இவரது மனைவி அனிதா (32). கடலூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் சமையல் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜெயமூர்த்திக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. கடன் பிரச்னையால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அனிதா, இளைய மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். பள்ளி முடிந்து வந்த மூத்த மகள் கதவை திறந்து பார்த்தபோது ஜெயமூர்த்தி புடவையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அவரது மகள் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஜெயமூர்த்தியின் உடலை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அனிதா கொடுத்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

புத்தாநத்தம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது

பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

துவரங்குறிச்சி கடைவீதியில் பொதுமக்களை தெறிக்க விட்ட காளைகள்