டெல்லியில் போதைப்பொருள் கடத்த முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து டெல்லியின் தெற்கு பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ கொகைன் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட முயன்ற 4 பேரையும் கைது செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.