டெல்லியில் இன்று 8 காங். எம்எல்ஏ.க்கள் மோடியுடன் சந்திப்பு

பனாஜி:  காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்த 8 கோவா எம்எல்ஏ.க்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வாரம்  காங்கிரசைச் சேர்ந்த 8 எம்எல்ஏ.க்கள் முதல்வர் சாவந்த் முன்னிலையில் பாஜ.வில் இணைந்தனர். அவர்களில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, டிலைலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செக்யூரா, ரூடால்ப் பெர்னாண்டஸ் ஆகிய எம்எல்ஏ.க்களும் பாஜவில் சேர்ந்தனர். இந்த 8 பேரும் விலகியதை தொடர்ந்து கோவா சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 3 ஆக குறைந்து விட்டது. இந்நிலையில், பாஜவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 8 பேரும், டெல்லியில் இன்று பிரதமர்  மோடியை சந்திக்க உள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் இந்த எம்எல்ஏ.க்கள் டெல்லி வருகின்றனர்….

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு