டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி-மனோரா கடற்கரையில் தொடங்கியது

பேராவூரணி : காவிரி டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு இதற்கான தொடக்க விழா சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரையில் நடைபெற்றது.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், ஓம்கார் பவுண்டேசன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ,மனோரா ரோட்டரி கிளப், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியன இணைந்து டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணிக்கான தொடக்கவிழா மனோரா கடற்கரையில் நடைபெற்றது.விதைப்பு பணியினை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் திருவாரூர் அறிவொளி, தஞ்சாவூர் அகில்தம்பி, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் செந்தில்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 கல்லூரிகளிலிருந்து 500 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் முதல்கட்டமாக 15 ஆயிரம் பனை விதைகளை மனோரா கடற்கரை பகுதியில் விதைப்பு செய்தனர். தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து சேதுபவாசத்திரம் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா கிளை தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை தலைவர் சக்திகாந்த், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் , கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் முருகானந்தம், ஓம்கார் பவுண்டேசன் இயக்குனர் பாலாஜி, நீலகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.மல்லிப்பட்டிணம் ஊராட்சி தலைவர் ஜலீலாபேகம் முகமது அலி ஜின்னா நன்றி கூறினார்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்