டூவீலர் விபத்தில் பெண் பலி

தேவதானப்பட்டி, ஜூலை 18: வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவரது மனைவி மணிமேகலை (21). இருவரும் கடந்த ஜூலை 15ம் தேதி தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வத்தலக்குண்டுவிற்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தனர். காட்ரோடு அருகே ஜீ.மீனாட்சிபுரம் பிரிவு பகுதியில் வந்த போது மணிமேகலை டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி