டூவீலர் மோதி தொழிலாளி பலி

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே, சூடப்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(70). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலர் மோதியது. இதில், படுகாயமடைந்த பெருமாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை