வேடசந்தூர், ஜூலை 13: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர்கள் ஆனந்த் (19), அஜித்குமார் (19). இருவரும் நேற்று டூவீலரில் வேடசந்தூர் வந்து விட்டு மீண்டும் சிவகாசியை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.வேடசந்தூர் காக்கா தோப்பூர் பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அஜித்குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.