டூவீலர் மீது கார் மோதி பஞ். தலைவர் பலி

கடத்தூர், அக்.22: அரூர் அருகே எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் (65). இவர் நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, பணி நிமித்தமாக சென்று விட்டு, தனது டூவீலரில் மதியம் அரூருக்கு சென்று கொண்டிருந்தார். தர்மபுரி- அரூர் சாலை ஒடசல்பட்டி கூட்டுரோடு வந்த போது, மொரப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார், மாரியப்பன் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை மாரியப்பன் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி