டூவீலர் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி

வருசநாடு, ஜூன் 9: ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன். விவசாயி. இவர் தனது மகன் கிருஷ்ணேஷ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவனை கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு டூவீலரில் இருவரும் சென்றனர். கடமலைக்குண்டை அடுத்துள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில் கிருஷ்ணேஷ்வரன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாவீரன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்