டூவீலர் பிரச்சார பேரணி கட்சியினருக்கு அழைப்பு

 

திருச்செங்கோடு, நவ.22: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் இணைவோம். மாநில உரிமை மீட்போம் என்னும் முழக்கத்துடன் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இளைஞரணி மாநாட்டினை பறைசாற்றும் விதமாக இருசக்கர வாகன பேரணி பெரியார் மண்டலத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது.

குமாரபாளையத்தில் இன்று காலை 9 மணி அளவிலும், திருச்செங்கோட்டில் காலை 11 மணி அளவிலும், பரமத்திவேலூரில் மதியம் 1 மணி அளவிலும் வாகன பேரணி தொடங்குகிறது.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி