டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிகல் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி மகன் நாகராஜ்(25). இவரும், அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் நாகேந்திரன், வெங்கடராமன் மகன் நாகராஜ்(26) ஆகிய மூவரும், நேற்று காலை டூவீலரில் தேன்கனிக்கோட்டையிலிருந்து தடிகல் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே பெங்களூரு கோரமங்கலா பகுதியை சேர்ந்த பைக் ரைடர் நவ்ரோஸ்(80) என்பவர் ஓட்டி சென்ற டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த நாகராஜ், பெங்களூருவைச் சேர்ந்த பைக் ரைடர் நவ்ரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த வெங்கடராமன் மகன் நாகராஜ், நாகேந்திரன் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு