டூவீலரில் வைத்திருந்த 12 பவுன், பணம் அபேஸ்

 

அரூர், ஏப்.26: அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(55), திமுக பிரமுகர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரூர் நான்கு ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு வெங்கடேசன் சென்றார். பின்னர் அங்கு அடகு வைத்திருந்த 12 பவுன் நகையை மீட்டு நகை மற்றும் ₹57 ஆயிரம் பணத்தை தனது ஸ்கூட்டியின் சீட் கவரினுள் வைத்துவிட்டு அருகேயுள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்தபோது சீட் கவரினுள் வைத்திருந்த நகை மற்றும் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மர்மநபர்கள் பணம், நகையை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஸ்கூட்டி சீட் கவரில் இருந்து 2 பேர் நகை மற்றும் பணத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை