டூவீலரில் வந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மதுரை, ஜூலை 11:மதுரை அனுப்பானடி மகாத்மாகாந்தி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி ரம்யா(31). இவர், நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே தனியார் ஸ்கேன் மையத்தின் முன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் சென்ற மர்ம நபர்கள், ரம்யா அருகே வந்து வண்டியை நிறுத்துவது போல் பாவனை செய்து, அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ரம்யா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை