டூவீலரில் கடத்திய கஞ்சா பறிமுதல்

 

தர்மபுரி, ஏப்.29: மாரண்டஅள்ளி போலீஸ் எஸ்ஐ ஜீவானந்தம் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டள்ளி பச்சபள்ளி ரோடு பச்சையம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றனர். அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, பையில் 4 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி