தர்மபுரி, ஜூலை 21: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வம் (50), விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், ஆடுகளை வடுகப்பட்டி ஏரி அருகே மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 பேர், திடீரென அங்கிருந்த ஆட்டை டூவீலரில் திருடிச்செல்ல முயன்றனர். இதனை பார்த்த தெய்வம், சத்தம்போட்டதுடன் அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர்களை துரத்தி சென்றார். அப்போது, ஒருவர் பொதுமக்கள் பிடியில் சிக்கினார். ஆடும் மீட்கப்பட்டது. மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். இதையடுத்து சிக்கிய நபரை அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி, அரூர் மோப்பிரிப்பட்டியை சேர்ந்த அஜய்குமார் (22) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
டூவீலரில் ஆடு திருட முயன்றவர் சிக்கினார்
previous post