டீ கடைக்காரர் மயங்கி விழுந்து சாவு

தர்மபுரி, ஜூன் 25: தர்மபுரி அடுத்த கீழ்மசூதி தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (52). இவர் பெரியார் சிலை அருகே டீ கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுபற்றி தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு