டி.கல்லுப்பட்டியில் டூவீலர் திருட்டு

பேரையூர், ஜூலை 30: டி.கல்லுப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த வீரமணி (41). இவர் தனது டூவீலரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, சாப்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டூவீலர்கள் திருட்டு நடந்து வருகிறது.
எனவே போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி டூவீலர் திருடர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை