டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பாக மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்

 

கோவை, அக்.13: உலக கண்பார்வை தினத்தையொட்டி கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் துறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் இம்மருத்துவமனையின் வளாகத்தில் நடந்தது. கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை உதவி கமிஷனர் சிற்றரசு முகாமினை துவக்கி வைத்தார்.

கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு இலவச கண் பரிசோதனை, கண் கண்ணாடிகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது. இதில், டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். சுனில் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை